செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில,; சோமரத்ன ராஜபக்ஷவுக்கு பெரும் உயிராபத்து ஏற்பட்டுள்ளது என அவருடைய சகோதரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதி பதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கடித மொன்றை அனுப்பி வைத்திருந்தார்.
அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக் கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார்.
தற்போது இவ்விவகாரம் பேசுபொரு ளாகியிருக்கும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோத ரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும், அவரது பாதுகாப்பைப் பலப்படுத் துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியு றுத்தியுள்ள அவரது சகோதரி ரோஹிணி ராஜபக்ஷ, இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமாத்திரமன்றி விதிக்கப்பட்டு மரணதண்டனை கப்பட்டு 29 வருடகாலமாக சிறை வாசம் அனுபவித்துவரும் தனது சகோ தரர் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அத்தோடு சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளார்.